Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 99 (Sura 99)
1; பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது
2; இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
3; “அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
4; அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
5; (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
6; அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
7; எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
8; அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

Pages ( 99 of 114 ): « Previous1 ... 9798 99 100101 ... 114Next »