Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 111 (Sura 111)
1; அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
2; அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
3; விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
4; விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
5; அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

Pages ( 111 of 114 ): « Previous1 ... 109110 111 112113114Next »