Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 96 (Sura 96)
1; (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
2; ´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
3; ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
4; அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
5; மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
6; எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
7; அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
8; நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
9; தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
10; ஓர் அடியாரை – அவர் தொழும்போது,
11; நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
12; அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
13; அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
14; நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
15; அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
16; தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
17; ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
18; நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
19; (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

Pages ( 96 of 114 ): « Previous1 ... 9495 96 9798 ... 114Next »