Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 1 (Sura 1)
1; அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
2; (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
3; (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
4; (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
5; நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
6; (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
7; (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

Pages ( 1 of 114 ): 1 23 ... 114Next »