Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 86 (Sura 86)
1; வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
2; தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3; அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
4; ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
5; மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
6; குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
7; முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
8; இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
9; இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
10; மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
11; (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
12; (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
13; நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
14; அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
15; நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
16; நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
17; எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

Pages ( 86 of 114 ): « Previous1 ... 8485 86 8788 ... 114Next »