Chapter 90 (Sura 90)
1; இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
2; நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
3; பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
4; திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
5; ´ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்´ என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
6; “ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
7; தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
8; அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
9; மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
10; அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
11; ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
12; (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
13; (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
14; அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
15; உறவினனான ஓர் அநாதைக்கோ,
16; அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
17; பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
18; அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
19; ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
20; அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114