Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 107 (Sura 107)
1; (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
2; பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
3; மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
4; இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
5; அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
6; அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
7; மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

Pages ( 107 of 114 ): « Previous1 ... 105106 107 108109 ... 114Next »