Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 80 (Sura 80)
1; அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
2; அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
3; (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
4; அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
5; (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
6; நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
7; ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
8; ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
9; அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
10; அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
11; அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
12; எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
13; (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
14; உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
15; (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
16; (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
17; (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
18; எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
19; (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
20; பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
21; பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்´ ஆக்குகிறான்.
22; பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
23; (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
24; எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
25; நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
26; பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
27; பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
28; திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
29; ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் –
30; அடர்ந்த தோட்டங்களையும்,
31; பழங்களையும், தீவனங்களையும்-
32; (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
33; ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது –
34; அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும் –
35; தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
36; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
37; அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
38; அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
39; சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
40; ஆனால் அந்நாளில் – (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
41; அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
42; அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

Pages ( 80 of 114 ): « Previous1 ... 7879 80 8182 ... 114Next »