Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 104 (Sura 104)
1; குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
2; (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
3; நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
4; அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
5; ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
6; அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
7; அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
8; நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
9; நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

Pages ( 104 of 114 ): « Previous1 ... 102103 104 105106 ... 114Next »