Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 93 (Sura 93)
1; முற்பகல் மீது சத்தியமாக
2; ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
3; உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
4; மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
5; இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
6; (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
7; இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
8; மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
9; எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
10; யாசிப்போரை விரட்டாதீர்.
11; மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.

Pages ( 93 of 114 ): « Previous1 ... 9192 93 9495 ... 114Next »